நமது மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி பிரச்சார பயணம் வெற்றிகரமாக கல்வி அலுவலர்களால் தொடக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து நடை பெறுகிறது . இவ்விழாவில் கந்தர்வகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு ஜேம்ஸ் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜோசப் , ஒன்றிய துணை பெருந்தலைவர் ராமையா , மேற்பார்வையாளர் வைத்திலிங்கம் ஆசிரியப் பயிற்றுனர் சங்கிலிமுத்து , இளமதி ஆசிரியர்கள் சிவகுருநாதன் , பாண்டிசெல்வி , திருத்துவ மேரி ,கிராமக் கல்வி குழு உறுப்பினர்கள் ,தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர் . இவ்விழாவில் நீலா , எஸ் .எ . கருப்பையா ஆகியோர்களின் குழுவினரின் கலைக்குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஒருங்கிணைத்தார் .